தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். ‘ஜெயம்’ திரைப்படம் மூலம் அறிமுகமான இவர், தனது திரைப்பயணத்தின் தொடக்கத்திலிருந்தே வித்தியாசமான கதைகளைக் கவனமாகத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது இவர், இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் உருவாகும் ‘கராத்தே பாபு’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்திற்குப் பிறகு, இயக்குநர் சுதா கொங்கரா இயக்கி வரும் ‘பராசக்தி’ என்ற திரைப்படத்தில், சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க, ரவி மோகன் இதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், ‘டிக்கிலோனா’, ‘வடக்குப்பட்டி ராமசாமி’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் யோகியுடன், நடிகர் ரவி மோகன் தற்போது கைகோர்க்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களின் கூட்டணியில் உருவாகவிருக்கும் புதிய திரைப்படத்தை பிரமோத் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் தொடங்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.