‘நாயகன்’ திரைப்படத்தில் முதன்முறையாக இணைந்த கமல் ஹாசனும் மணிரத்னமும், நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்போது ‘தக்லைப்’ திரைப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். இதில் சிம்புவும் மற்றொரு ஹீரோவாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் ஜூன் மாதம் திரைக்கு வரவிருக்க, அதன் புரமோஷன் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ‘தக்லைப்’ படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் சிம்பு நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்த புதிய படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கின்றது.
இதற்கிணங்க, மணிரத்னம் இயக்கத்தில் ஏற்கனவே ‘செக்கச் சிவந்த வானம்’ மற்றும் ‘தக்லைப்’ ஆகிய இரு படங்களில் நடித்துள்ள சிம்பு, மூன்றாவது முறையாகவும் அவரது இயக்கத்தில் நடிக்க உள்ளார். தற்போது கைவசம் உள்ள படங்களை முடித்து முடித்ததும், அவர் மணிரத்னம் இயக்கும் புதிய திரைப்படத்தில் இணைவார் என்று கூறப்படுகிறது.