தெலுங்கு இயக்குனரான த்ரிவிக்ரம், தெலுங்கு திரைப்படத் துறையில் மகேஷ் பாபு, பவன் கல்யாண், ஜூனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல படங்களை இயக்கியவர். தற்போது அவர், அல்லு அர்ஜுனை வைத்து ஒரு பெரிய பட்ஜெட்டில் திரைப்படம் இயக்கவிருந்தார்.

ஆனால் இதற்கிடையில், அல்லு அர்ஜுன் அட்லி இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த இடைவெளியை பயன்படுத்தி, த்ரிவிக்ரம் ஒரு புதிய படத்தை இயக்க முடிவு செய்துள்ளார்.
அதற்காக த்ரிவிக்ரம், நடிகர் தனுஷை நேரில் சந்தித்து தனது அடுத்த படத்திற்கான கதையை கூறியுள்ளார். தற்போது இந்த படம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடக்க நிலையில் உள்ளது என தெலுங்கு திரைப்பட வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.