ஜெயம் ரவி மற்றும் ராஷி கண்ணா நடித்த ‘அடங்க மறு’ திரைப்படத்தை இயக்கியவர் கார்த்திக் தங்கவேல். இந்த திரைப்படம் 2018ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இயக்குநர் கார்த்திக் தங்கவேல் தனது அடுத்த படமாக விக்ரமிடம் ஒரு கதையை கூறி அவரிடமிருந்து ஒப்புதலை பெற்றுள்ளாராம். இந்த புதிய திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘வீர தீர சூரன்’ படத்தை தொடர்ந்து, ‘மண்டேலா’ மற்றும் ‘மாவீரன்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கும் விக்ரமின் 63வது திரைப்படத்தில் அவர் நடிக்கவிருக்கிறார்.
தற்போது இந்தப் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ள நிலையில், இந்தப் படத்தை முடித்த பிறகு விக்ரம், கார்த்திக் தங்கவேல் இயக்கும் தனது 64வது படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.