நடிகர் ஜெயம் ரவி தனது பெயரை ரவி மோகன் என மாற்றிய பின்னர், “காதலிக்க நேரமில்லை” திரைப்படம் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், இளம் தலைமுறை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது, நடிகர் சிவகார்த்திகேயனுடன் “பராசக்தி” மற்றும் “கராத்தே பாபு” ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் நடித்த “ஜீனி” திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், ரவி மோகன் புதிய திரைப்படம் ஒன்றை இயக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தில் நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும், இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.