பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களுக்கு எதிராக தொடர்ந்து தன்னம்பிக்கையுடன் தனது குரலை எழுப்பி வருபவர் பாடகி சின்மயி. இந்நிலையில், தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் ஒரு உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், கடந்த சில ஆண்டுகளாக நான் பல்வேறு மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறேன். அதன் காரணமாக அவமானப்படுத்தல்கள், மனதளவிலான சிரமங்கள், எரிச்சலூட்டும் விமர்சனங்கள் என பல துன்பங்களை அனுபவித்தேன். ஆனால் இவை அனைத்தையும் நான் இறைவனுக்கே அர்ப்பணித்துவிட்டேன்.
தற்போது நான் பெறும் ஆதரவு மற்றும் வன்முறை குற்றங்களை செய்யும் நபர்களுக்குக் கிடைக்கும் ஆதரவும் இறைவனின் கைகளில்தான் இருக்கட்டும். அவர்கள் செய்த தவறுகளுக்கும் அவர்களுக்கு துணை நிற்கும் ஆதரவாளர்களுக்கும் கடவுளும், கர்மாவும் தக்க தீர்ப்பை வழங்கட்டும். இதுபோன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு, அதிலிருந்து தப்பிக்க முடிந்தவர்கள் அனைவரும், இன்று எனக்கு கிடைக்கும் ஆதரவைப் பெற வேண்டுகிறேன். இறுதியில் உண்மைதான் வெல்ல வேண்டும் என்று பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.