தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் மணிகண்டன், தானே பேய் படங்களைப் பார்க்கும் போது மிகுந்த பயம் அடைந்ததாகவும், இதுபோன்ற படங்களை தற்போது பெரிதும் பார்ப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதைப்பற்றி ஒரு நேர்காணலில் அவர், பேய் படங்களை பார்த்தாலே எனக்கு பயமாக இருக்கும். ‘அன்னாபெல்’ திரைப்படத்திற்கு தெரியாமலே சென்றேன். படம் பார்த்த பிறகு நன்றாக தூங்கவே முடியவில்லை. ஆன்மீக நம்பிக்கைகள் எனக்கில்லை. இருப்பினும், எழுத்தாளராக எனது முதல் திரைப்படமானது பீட்சா 2. எனக்கு பேய் படங்களில் நடிக்கவேண்டும், அத்தகைய படங்களை இயக்கவேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால், பார்ப்பது மட்டும் எனக்கு மிகவும் கடினம் என்று தெரிவித்துள்ளார்.
‘காலா’, ‘ஜெய்பீம்’, ‘சில்லு கருப்பட்டி’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் மணிகண்டன். ‘குட்நைட்’, ‘லவ்வர்’, ‘குடும்பஸ்தன்’ போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வெற்றி நடை போட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.