இசைஞானி இளையராஜா தனது பிறந்த நாளன்று ரசிகர்களை நேரில் சந்திப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில், அவர் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது தனிப்பட்ட ஸ்டூடியோவில் காலை நேரத்தில் இருந்து ரசிகர்களை சந்தித்து வந்தார். அவர் ஸ்டூடியோவிற்கு வருகை தந்தபோது வாசலிலேயே காத்திருந்த ரசிகர்கள் அவரை பார்த்து மகிழ்ச்சி அடைந்து, அவருக்கு வாழ்த்துகளை கூறி உற்சாகம் காட்டினார்கள்.

பின்னர், திரையுலகை சேர்ந்தவர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் ஸ்டூடியோவில் அவரை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். இளையராஜா கேக் வெட்டி தனது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடினார். ரசிகர்களுடன் சேர்ந்து, நடிகர் ராமராஜன் உள்ளிட்ட திரையுலகினர் மற்றும் நண்பர்களும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் தனது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர்.
பிறகு, இளையராஜா பேசுகையில், எனது வாயெல்லாம் அடைந்துவிட்டது… வார்த்தைகள் வரவில்லை. என்னைப் பார்த்து இந்த அளவிற்கு அன்பு காட்டியதற்காக அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. என் பிறந்த நாளுக்காக பல இடங்களில் இருந்து பயணம் செய்து வந்து வாழ்த்திய ரசிகர்களின் கேள்விகளுக்கு நன்றியைத் தெரிவிக்க வார்த்தைகள் இல்லை. சிலர் தூங்காமலும், சிலர் ஒரு வாரமாக என்னை சந்திக்க வேண்டும் என்ற ஆவலுடன் தூக்கம் இன்றி வந்திருக்கிறார்கள். ஆண்டவனின் அருள் எப்போதும் என்னுடன் இருக்கிறது. அனைவருக்கும் நன்றி” என உணர்ச்சிப்பூர்வமாக கூறினார்.