இயக்குநர் அமீரின் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வெளியான ‘மவுனம் பேசியதே’ திரைப்படத்தின் மூலம் தமிழ்ச் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் திரிஷா. இவரது நடிப்பில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மலையாளத்தில் ‘ஐடென்டிட்டி’, தமிழில் ‘விடாமுயற்சி’, சமீபத்தில் ‘குட் பேட் அக்லி’ போன்ற திரைப்படங்கள் வெளியாகி பாராட்டைப் பெற்றன.

இதையடுத்து, தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தக் லைப்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் திரிஷா. இப்படத்தில் கமல்ஹாசனும் சிம்புவும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும், ஆர்.ஜே பாலாஜி இயக்கி வரும் ‘சூர்யா 45’ என்ற திரைப்படத்திலும் திரிஷா நடித்து வருகிறார்.
இந்நிலையில், ஒரு பேட்டியில் கலந்துகொண்ட திரிஷாவிடம், “உங்களுக்கு எந்த நடிகருடன் இணைந்து நடிக்க ஆசை?” எனக் கேட்டபோது, “சந்தேகமே இல்லாமல், எனக்கு பகத் பாசிலுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பதே ஆசை. அவர் எந்த வகையான கதையிலும் அதற்கேற்ற அற்புதமான நடிப்பை வெளிப்படுத்துவார்” என பதிலளித்தார்.