ரஜினிகாந்த் நடித்து வரும் “கூலி” படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்துவரும் ஸ்ருதிஹாசன், அதன்பின்னர் பிரபாஸ் நடித்துவரும் “சலார் 2” படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருந்தது. அந்த ஆசை தற்போது “கூலி” படத்தின் மூலம் நிறைவேறி உள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.

அதே சமயம், “இந்த படத்தில் ரஜினி சாருடன் நடிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவரிடமிருந்து பல புதிய விஷயங்களை நான் கற்றுக் கொண்டேன்,” என்றும் ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.

திருமணத்தைக் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போது, அவர், “ஒரு நபருடன் தொடர்பில் இருப்பது எனக்கு பிடிக்கும். காதலிப்பது என்னுடைய மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும். ஆனால், இதுவரை என்னை மிகவும் ஈர்க்கக்கூடிய ஒரு சிறந்த நபரை நான் சந்திக்கவில்லை. அதனால், திருமணத்தைப் பற்றிய யோசனை இப்போது எனக்கில்லை. மேலும், இப்போதைக்கு எனக்கு திருமணத்தில் எந்த விதமான ஆர்வமும் இல்லை,” என்று கூறியுள்ளார்.