பாலிவுட்டில் அமீர் கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘சித்தாரே ஜமீன் பர்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இயக்குநர் ஆர். எஸ். பிரசன்னா இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அதே நேரத்தில், கதாநாயகியாக ஸ்ரீலீலா நடித்துள்ள ‘ஜூனியர்’ திரைப்படத்தில் நடிகை ஜெனிலியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் இயக்குநர் ராதா கிருஷ்ணா ரெட்டியின் இயக்கத்தில் உருவாகியுள்ளது. ‘ஜூனியர்’ திரைப்படம் வருகிற ஜூலை 18-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.
இந்நிலையில், தென்னிந்திய திரைப்படங்களில் உங்களுக்குச் சிறந்த கதாபாத்திரங்கள் கிடைத்ததா? எனக் ஒரு நேர்காணலில் நடிகை ஜெனிலியாவிடம் கேட்டபோது அதற்கு அவர், தென்னிந்திய சினிமாவில் எனக்கு மிகச் சிறந்த கதாபாத்திரங்கள் கிடைத்துள்ளன. நான் கற்றுக்கொண்டதற்கான அடித்தளம் அதுதான். அந்த இடத்தில் பணியாற்றியதற்காக நான் எப்போதும் நன்றியுடன் இருக்கிறேன். நான் ஹைதராபாத் சென்றாலும், அங்கே என்னை ‘ஹாசினி’யாகவே மக்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள். அந்த மாதிரியான கதாபாத்திரங்களை நான் பெற்றதற்காக எனக்கு ஒரு ஆசீர்வாதம் கிடைத்ததுபோலவே உணர்கிறேன்,” என தெரிவித்துள்ளார்.