சமீபத்தில் ரிஷப் ஷெட்டி அளித்த பேட்டியில், ‛‛காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தை பணத்திற்காக எடுக்கவில்லை. நான் வேறு கதையைப் படமாக்கியிருந்தால் இவ்வளவு ரிஸ்க் எடுத்திருக்க மாட்டேன். காந்தாராவை மக்கள் கலாசார வேறுபாடுகளைக் கடந்து அதிகம் பேசியபோது இதை நியாயத்துடன் முடிக்க வேண்டும் என நினைத்தேன். காந்தாராவின் முன்கதையை சொல்வதன்மூலம் அதற்கு நியாயம் சேர்க்க முடியும் என நம்பினேன். தெய்வீகத்தின் நம்பிக்கையால் இந்த படத்தை எடுத்தேன்” என்றார்.


