பிரபல பாலிவுட் நடிகை கஜோல், ஒரு படத்தின் பணிகளை முடித்த பிறகு மட்டுமே அடுத்தப்படத்தின் பணியில் ஈடுபடுவேன் எனக் கூறியுள்ளார். தற்போது அவர் நடித்துள்ள ‘மா’ என்ற ஹாரர்-திரில்லர் படத்தை விஷால் பியூரியா இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தை அஜய் தேவ்கன் மற்றும் ஜோதி தேஷ்பாண்டே இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் பெங்காலி மொழிகளில் வரும் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் விளம்பர நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய கஜோல் கூறியதாவது, ஒரே நேரத்தில் ஒரு படத்தில் மட்டுமே பணிபுரிவது என் பழக்கம். மற்றவர்களைப்போல ஒரே நேரத்தில் நான்கு படங்களில் நடித்ததில்லை.
ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகே அடுத்த படத்தில் நடிப்பேன். 20-30 மணி நேரம் வேலை செய்வது எனக்கு தேவையில்லாத ஒன்று. ஒரு வரையறைக்குள் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்பதில் எனக்கு எப்போதும் தெளிவு இருக்கிறது என்று கூறினார்.