தக் லைப் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாதது குறித்து இயக்குநர் மணிரத்னம் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகிய பான் இந்தியா திரைப்படமான “தக் லைப்” இந்த மாதத்தின் தொடக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியானது.

கமல் நடிப்பில் உருவான “நாயகன்” திரைப்படத்திற்கு பிறகு, மீண்டும் இருவரும் இணைந்ததன் காரணமாக, ரசிகர்கள் மற்றொரு கிளாசிக் படத்தை எதிர்நோக்கியிருந்தனர். ஆனால், “தக் லைப்” திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் வெற்றியை பெறவில்லை.
இயக்குனர் மணிரத்னம் பிரபல பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், நாயகன் போன்ற மற்றொரு படத்தை எதிர்பார்த்தவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் அந்த மாதிரியான படத்தை கொடுக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. நாங்கள் ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும் விரும்பினோம். ஆனால் ரசிகர்கள் நாங்கள் எடுத்த படத்தை கடந்து வேறு ஒன்றை எதிர்பார்த்துள்ளனர் என கூறியுள்ளார்.