Tuesday, October 15, 2024

ஒரு பெரிய ஹீரோ படத்தில் வெயில், மழை என எதையும் பார்க்காமல் பல நாட்கள் நடித்தேன்…. ஆனால் வெறும் அரைநாள் காட்சிகள் தான் இருந்தன… பிரியா பவானி ஷங்கர் OPEN TALK!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை பிரியா பவானி சங்கர், “டிமான்ட்டி காலனி 2” படத்தின் மூலம் தனத் மீதான “ராசி இல்லாத நடிகை” என்ற விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார். அவருக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பெரிய வெற்றிப் படமாக “டிமான்ட்டி காலனி 2” கிடைத்துள்ளது. குறிப்பாக, இப்படத்தில் பிரியா பவானி சங்கருக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த முக்கியத்துவத்தை உணர்ந்து, தனது நடிப்பையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார். தற்போது, ஜீவாவுடன் நடித்துள்ள “பிளாக்” என்ற படம் வெளியாகி நல்ல, வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், பிரியா பவானி சங்கர் அளித்த ஒரு பேட்டி ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் அவர், “ஒரு பெரிய ஹீரோவின் படத்தில் நடித்தேன். என்னை வைத்து 55 நாட்கள் ஷூட் செய்தார்கள். வெயில், மழை என எதையும் பொருட்படுத்தாமல் வேலை செய்தேன். ஆனால், படம் முடிந்து டப்பிங்கிற்குச் சென்றபோது, அரை நாளுக்குத்தான் எனது காட்சிகள் இருந்தன. அது எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

நான் உடனே கேட்டேன், ‘முதலில் என்னிடம் சொன்ன கதை என்ன? இப்போது என்ன இருக்கிறது’ என்று. அதற்கான பதிலாக, ‘அதை மியூசிக்கல் காட்சிகளில் காணலாம்’ என்றனர். நான் அதனால் அதிர்ச்சி அடைந்தேன். படம் ஹீரோவுக்குத் தொடர்புடையது என்று அவர் கூறினார் அவர் 135 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும், எனவே பல காட்சிகள் நீக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர் என்றுள்ளார்.

- Advertisement -

Read more

Local News