மனிதர்கள் – நண்பர்களான கபில் வேலவன், தக்ஷா, குணவந்தன் தனபால், சாம்பசிவம், அர்ஜுன் தேவ் மற்றும் பிரேம் ஆகிய ஆறு பேர் ஒரு நடுத்தர இரவில் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த போது திடீரென மோதல் ஏற்படுகிறது. ஒருவருக்கொருவர் தாக்கும் நிலையில், மதுபாட்டிலால் குத்தப்பட்டு பிரேம் உயிரிழக்கிறார். இந்த கொலை யார் செய்தது என்பது தெரியாத நிலையிலே, மீண்டும் நண்பர்களுக்குள் வாக்குவாதம் மற்றும் சண்டை உருவாகிறது.ஒரு கட்டத்தில் சண்டையை முடிவுக்கு கொண்டு வர முயற்சிக்கும் கபில் வேலவன், பிரேமின் உடலை கார் டிக்கியில் மறைத்து வைக்கிறார். அதன் பின்னர் அனைவரும் அந்த இடத்திலிருந்து புறப்படுகிறார்கள். பிரேமின் உடலுடன் என்ன நடந்தது? நடு இரவிலேயே அவர்கள் எதிர்கொண்ட சவால்கள் என்ன? இறுதியில் இது எப்படித் தீருகிறது? என்பதுதான் மீதமுள்ள பரபரப்பான கதை.
இக்கட்டான சூழ்நிலையில் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்கும் கபில் வேலவன், பதற்றத்தில் இருந்து தவிக்கின்ற குணவந்தன் தனபால், அழுகையோடு பேசும் தக்ஷா, மனச்சாட்சியின் கலக்கம் கொண்ட சாம்பசிவம், பரபரப்பாக செயல்படும் அர்ஜுன் தேவ் மற்றும் சுறுசுறுப்பான பேச்சுடன் இருப்பவராக பிரேம் என ஒவ்வொருவரும் தங்கள் கதாபாத்திரங்களை சிறப்பாக ஆக்கியுள்ளனர்.
இரவு நேரத்திலேயே நடைபெறும் கதை என்பதற்கேற்ப ஒளிப்பதிவாளராக அஜய் ஆபிரகாம் ஜார்ஜ் சிறப்பாக வேலை செய்துள்ளார். கார் ஹெட்லைட்டை மட்டும் கொண்டு படமாக்கப்பட்ட சில காட்சிகள் தனித்துவமாக அமைந்துள்ளன. அனிலேஷ் மாத்யூவின் இசை படத்துடன் இணைந்து ஒத்துழைக்கிறது.
ஆனால் பின்னணி இசையில் இன்னும் சிறிது கவனம் தேவைப்படுகின்றது.ஆறு நபர்களின் நெறியான நடிப்பும், இரண்டாம் பாதியில் சிறிது வேகம் குறைந்தாலும், யாராலும் கணிக்க முடியாத திருப்பங்களுடன் பரபரப்பை குறைக்காமல் கதை முன்னேற்றியுள்ள இயக்குநர் ராம் இந்திரா தனது முதல் படத்திலேயே பாராட்டத்தக்க முயற்சியைக் காட்டியுள்ளார்.