கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதலாமாண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், அன்பு நண்பர், தேமுதிக நிறுவனர், கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைந்து ஓராண்டாகிறது. அவரது இழப்பை மக்களின் மனம் ஏற்க மறுக்குமளவிற்குப் பெரும் தாக்கத்தை உருவாக்கிச் சென்றிருக்கிறார் கேப்டன். வறியோர்க்கு உதவும் ஈகை, எளியோரின் பக்கம் நிற்கும் நேர்மை, மனதில் பட்டதைப் பேசும் துணிச்சல் ஆகிய அவரது பண்புகள் தமிழ் மனங்களில் எப்போதும் பசுமையாக நிலைத்திருக்கும்” என பதிவிட்டுள்ளார்.
