Join our community of SUBSCRIBERS and be part of the conversation.

To subscribe, simply enter your email address on our website or click the subscribe button below. Don't worry, we respect your privacy and won't spam your inbox. Your information is safe with us.

News

Company:

Tuesday, March 11, 2025

Touring Talkies

காலை 4 மணிக்கே எழுந்து படப்பிடிப்புக்கு தயாராக இருப்பார்… சூர்யாவின் உழைப்பு குறித்து மெய்சிலிர்த்த இயக்குனர் சிவா! #Kanguva

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நேற்று ‘கங்குவா’ படத்தின் ‘3டி’ ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதனைக் காண விழாவில் கலந்துகொண்ட சூர்யா குறித்தும் படத்தின் இயக்குனர் சிவா ஆழ்ந்த மனநிலையில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது: ‘கங்குவா’ படத்தின் கதையை எழுதி கொண்டிருந்தபோதே இதுவொரு மிகப்பெரிய படம் என உணர்ந்தேன். அதனை உருவாக்குவது எனக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது. ‘உன்னால் முடியும்’ என்று அனைவரும் என்மீது நம்பிக்கை வைத்தனர். படக்குழுவினர் ஒருவர்மீது ஒருவர் நம்பிக்கை வைத்து படத்தை நிறைவு செய்துள்ளோம். அவர்களின் நம்பிக்கையே இந்தப் படமாக உருவாகியுள்ளது.

எங்கு சென்றாலும் சூர்யா சார் ரசிகர்கள் என்னிடம் கேட்கும் ஒரே கேள்வி ‘சார் எங்க அண்ணனுக்கு ஒரு மாஸான, நல்ல படம் கொடுங்க சார்’ என்பதாக இருக்கும். நான் அவர்களுக்குச் சொல்லும் ஒன்று ‘உங்கள் அண்ணனுக்கான மாபெரும் வெற்றி படம்தான் இது’ என்பதாகும். சூர்யா சார், ரசிகர்களின் அளவற்ற அன்புக்குத் தகுதியானவர். கடந்த 2-3 ஆண்டுகளாக அவர் உடன் பயணித்து வருகிறேன். காலை 4 மணிக்கே எழுந்து, 6 மணிக்கே மேக்கப்புடன் படப்பிடிப்புக்கு தயாராக இருப்பார்.

எந்தநேரமும், ‘இது வேண்டுமா, இதை செய்யலாமா?’ என கேட்காமல், தண்ணீரில் இருக்கச் சொன்னால் இருப்பார், மலைமேல் ஏறச் சொன்னால் ஏறுவார், மரத்தில் ஏறச் சொன்னால் கூட தயக்கமின்றி ஏறுவார். சூர்யா சார் ‘கங்குவா’ கதாபாத்திரத்திற்காக மனதாலும் உடலாலும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பாடுபட்டுள்ளார் என்றார்.

- Advertisement -

Read more

Local News

Hide WhatsApp Form
<p>How can I help you? :)</p>