இயக்குனர் ஹனிப் அதேனி இயக்கத்தில் உன்னி முகுந்தன், சித்திக், ஜெகதீஷ் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான மலையாள திரைப்படம் ‛மார்க்கோ’. இப்படத்தில் அதிக அளவில் வன்முறைக் காட்சிகள் இடம்பெற்றிருந்ததால், பலரும் விமர்சனம் செய்தனர். எனினும், இப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது.

மார்க்கோ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ரசிகர் மார்க்கோ 2 குறித்த கேள்வியை உன்னி முகுந்தனிடம் எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த உன்னி முகுந்தன், ‛‛மார்க்கோ 2 உருவாகவில்லை. அந்தப் படத்தைச் சுற்றி உருவான நெகட்டிவ் சூழ்நிலை காரணமாக அந்த திட்டத்தை நிறுத்திவைக்கிறோம். ஆனால் மார்க்கோ 2க்கு பதிலாக அதைவிட சிறந்த, பெரிய மற்றும் தரமான ஒரு படத்தை நிச்சயமாக வழங்க விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.