இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ‘கருடன்’ படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி ஹரிபிரியன், ஆர்.வி. உதயகுமார், வடிவுக்கரசி ஆகியோரும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

கடந்த ஆண்டு மே 31ஆம் தேதி வெளியான இப்படம், திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றது. குறிப்பாக இந்த படத்தில் நடிகர் சூரியின் நடிப்பு தனிப்பட்ட வகையில் பாராட்டுப் பெற்றது.
இந்த நிலையில், கருடன் வெளியாகி ஒரு ஆண்டு நிறைவடைந்ததையொட்டி, நடிகர் சூரி தனது எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அது உங்கள் அன்பால் உயிர் பெற்ற உணர்வு. இந்த ஒரு ஆண்டு எனக்கு வாழ்நாள் வரைக்கும் நினைவாக இருக்கும். உங்கள் ஆதரவும் நம்பிக்கையும் என்றைக்கும் என் உள்ளத்தின் ஆழத்தில். மிக்க நன்றி.” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.