இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமான ஜி.வி. பிரகாஷ், பின்னர் கதாநாயகனாக உருவெடுத்து தற்போது தனக்கென ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார். 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள அவர், இரு முறை தேசிய விருதை வென்றுள்ளார். ‘சூரரைப் போற்று’ மற்றும் ‘வாத்தி’ படங்களுக்கு சிறந்த இசையமைப்பாளர் பிரிவில் அவர் தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், செல்வராகவன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடித்துவரும் படம் ‘ மெண்டல் மனதில்’. இந்த படத்தின் பூஜை கடந்த 2024ஆம் ஆண்டில் நடைபெற்றது, அதன் பின்னர் படப்பிடிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
படத்தைப் பற்றிய எந்த தகவலும் இதுவரை வெளிவராத நிலையில், தற்போது ஜி.வி. பிரகாஷ் தனது எக்ஸ் (Twitter) பக்கத்தில், “மெண்டல் மனதில் படத்தின் 4வது கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. புகழ்பெற்ற செல்வராகவன் சார் இயக்கத்தில் இந்த படம் உருவாகிறது. ‘ஆயிரத்தில் ஒருவன்’ மற்றும் ‘மயக்கம் என்ன’ பிறகு, எனக்கு மிகவும் பிடித்த திரைப்படமாக இது இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.