சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான சங்கர் மகாதேவனின் இசையில் சாலை விழிப்புணர்வு குறித்த பாடல் ஒன்று 22 மொழிகளில் விரைவில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.இந்தப் பாடலை அனைவரும் தங்களது சமூக ஊடகங்களில் பகிர்ந்து சாலைப் பாதுகாப்பைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டுமெனவும் காரில் பயணிக்கும் போது சீட் பெல்ட் அணிய வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
