மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியானது “மாவீரன்” திரைப்படம். இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து, மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த வெற்றியின் தொடர்ச்சியாக, சாந்தி டாக்கீஸ் நிறுவனம் அடுத்ததாக சித்தார்த்தின் 40-வது திரைப்படமான “சித்தார்த் 40” படத்தை தயாரிக்கவுள்ளது. இப்படத்தை “8 தோட்டாக்கள்” மற்றும் “குருதி ஆட்டம்” படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்கவுள்ளார்.இப்படத்தில் சரத் குமார், தேவையாணி, மீதா ரகுநாத், சைத்ரா அசார் போன்ற பிரபல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்று படக்குழு சில மாதங்களுக்கு முன் அறிவித்தது.
தற்போது படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. இசையமைப்பாளராக அம்ரித் ராம்நாத் இந்த படத்தில் பணியாற்றுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்ரித் ராம்நாத், சில மாதங்களுக்கு முன் வெளியான “வருஷங்களுக்கு சேஷம்” என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். அந்த படத்தில் இடம்பெற்ற “நியாபகம்” பாடல் மிகப்பெரிய ஹிட்டானது.”சித்தார்த் 40″ திரைப்படம் மூலம், அம்ரித் தமிழ்த் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். மேலும், பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீ அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.