நடிகர் விஜய் தேவரகொண்டா சமீபத்தில் அளித்த பேட்டியில் அனிருத் குறித்து அவர் கூறியதாவது, அனிருத் மிகவும் திறமையானவர். நான் அவருடைய ரசிகன். அனிருத் பாட்டில் வேற நடிகர்கள் இருந்தால் எனக்கு பொறாமையாக இருக்கும். இப்போது கிங்டம் படத்தின் மூலம் அனிருத் பாட்டு எனக்குத்தான் வந்துள்ளது. ஒரு முறை எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கப் போயிருந்தேன். அப்போ அந்த மெஷினுக்குள்ள என்ன அனுப்பிட்டாங்க. ஆனா நான் அனிருத் பாட்டு போடுங்கன்னு கேட்டு மெஷினுக்குள்ள வைப் பண்ணிட்டு இருந்தேன். இப்போ நானும் அனியும் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டோம். என தெரிவித்துள்ளார்.
