இயக்குனர் சுந்தர்.சி கடந்த சில வருடங்களாக ‘அரண்மனை’ படத்தின் 1, 2, 3 பகுதிகளை ஹாரர் காமெடி ஜானரில் இயக்கி வெற்றிகரமாக நடத்தி வந்தார். சமீபத்தில் வெளியான ‘அரண்மனை 4’ வசூல் ரீதியாக பெரிய வெற்றியாக அமைந்தது.
இப்போது ‘அரண்மனை’ படத்தின் 5ஆம் பாகத்தை உருவாக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது சுந்தர்.சி அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார், மேலும் படப்பிடிப்பு நவம்பர் மாதத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு கோடை பருவத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலுவை மையமாகக் கொண்டு உருவாக்கியுள்ள ‘கேங்க்ஸ்டர்ஸ்’ படமும் அடுத்த ஆண்டு முதல் பாதியில் திரைக்கு வரும் எனக் கூறப்படுகிறது.