தமிழில் விஜய் நடித்த ‛பிரியமுடன், யூத்’ ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் வின்சென்ட் செல்வா ஆவார். அந்தப் படங்களைத் தொடர்ந்து, ஜித்தன் என்ற திரைப்படத்தையும் இயக்கினார். மிஷ்கின் இவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். வின்சென்ட் செல்வா கடைசியாக 2016ஆம் ஆண்டில் ‘விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்’ என்ற தமிழ்ப்படத்தை இயக்கினார்.

இந்த திரைப்படத்திற்குப் பிறகு, அவர் எந்தவொரு புதிய படத்தையும் இயக்கவில்லை. தற்போது, சுமார் 9 வருடங்களுக்கு பிறகு, வின்சென்ட் செல்வா தமிழில் ‘சுப்பிரமணி’ என்ற புதிய திரைப்படத்தை இயக்கவிருக்கிறார்.
இந்த புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக ரிச்சர்ட் ரிஷி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இத்திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.