திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். கடந்த சில நாள்களாக உடல் பாதிக்கப்பட்டிருந்த வேலு பிரபாகரன், சென்னையில் உள்ள தனியா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், வேலு பிரபாகரன் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஒளிப்பதிவாளராக தன் வாழ்க்கையை தொடங்கியவர் வேலு பிரபாகரன். மேலும், இயக்குநர் மற்றும் நடிகர் என பல பரிமானங்களைக் கொண்டவர். 1989-ல் ‘நாளைய மனிதன்’ படத்தில் இயக்குநராக அறிமுகமாகி ‘அசுரன், ராஜாளி, கடவுள், சிவன், புரட்சிக்காரன்’ என பல படங்களை இயக்கியுள்ளார்
