நடிகர் அருண் விஜய் சமீபத்தில் திருவண்ணாமலையில் சுவாமி தரிசனம் செய்த பிறகு, செய்தியாளர்களை சந்தித்தார். அந்த நேரத்தில், தனுஷ் இயக்கத்தில் நடித்த அனுபவம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தனுஷ் இயக்கத்தில் நடித்த அனுபவம் எனக்கு மிகவும் வித்தியாசமாக இருந்தது. அவர் ஒரு தெளிவான, அனுபவம் வாய்ந்த இயக்குனராக இருந்தார். அவரை ஒரு நடிகராக பார்ப்பதைவிட, இயக்குநராக பார்க்கும்போது இன்னும் சிறப்பாக இருக்கிறது. அந்த படம் அனைவருக்கும் தொடர்பாக அமையும். எனது கதாபாத்திரமும் சிறப்பாக இருக்கும்” என்று கூறினார்.

மேலும், “தனுஷ் தொடர்ந்து பல கதைகளை எழுதிக்கொண்டிருக்கிறார். கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறார். அதை பார்த்து எனக்கும் உத்வேகம் வருகிறது. ‘ராயன்’ படத்தை பார்த்தபோது அவருடன் ஒரு முறையாவது பணியாற்ற வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதற்கேற்ப இந்த பட வாய்ப்பு கிடைத்தது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படம் நல்லதாய் இருக்கும், அனைவரும் விருப்பம் கொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து, நடிகர் சங்க கட்டடம் குறித்து கேள்வி எழுந்தபோது, “நான் கார்த்தியிடம் பேசினேன். பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நடிகர்கள் பல ஆண்டுகளாகக் கனவு கண்ட கட்டிடம் நனவாகும் தருணத்தில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்றும் தெரிவித்தார்.