ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சரிகமப ஷோ செம ஹிட் ஆகிவிட்டது சரிகமப நிகழ்ச்சி மிகவும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி. இதன் கடைசி சீசனில் டாப் போட்டியாளர்களில் ஒருவர் தான் அபினேஷ் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் சரிகமப செட்டை மிகவும் மிஸ் செய்கிறேன், பைனல் முடிந்ததும் அடுத்த நாள் என்ன பாடல் தேர்வு செய்யலாம் என்று யோசனை தான் முதலில் வந்தது.எஸ்.பிபி.சரண், ஸ்வேதா மோகன் என அனைவருமே ஜாலியாக இருப்பார்கள். பைனல் முன்பு தேவா சார் பாராட்டி இருந்தார், அவர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்த கீபோர்டை நான் பொக்கிஷமாக வைத்துள்ளேன். அந்த கீபோர்ட் வைத்து நான் மியூசிக் டைரக்டர் ஆகனும் என வாழ்த்தினார். அவருடைய கையெழுத்து என் தலையெழுத்தை மாத்தும் என நம்புவதாக கூறியுள்ளார்.
