ஜானி டிசோசா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சின்னதா ஒரு படம்’ எனும் திரைப்படம், நான்கு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட நான்கு தனித்துவமான கதைகளின் தொகுப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் குறித்த தகவலைப் பகிர்ந்துள்ள படக்குழு, இந்த நான்கு கதைகளும் தனியான கதை அமைப்புகள் மற்றும் சுவாரஸ்யமான கதாப்பாத்திரங்களைக் கொண்டது.
ஆந்தாலஜி வகை திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம், புதிய கதை சொல்வதற்கான அணுகுமுறைகளுடன், மனிதர்கள் எதிர்கொள்வதான பல்வேறு உணர்ச்சிப் பரிமாணங்களையும் மையமாகக் கொண்டு நகரும். இதில் விதார்த், பூஜா தேவரையா, பிரசன்னா, ரோகிணி, லட்சுமி பிரியா சந்திரமவுலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அதேபோல, முக்கிய துணை வேடங்களில் சந்தானம், குரு சோமசுந்தரம், ரோபோ சங்கர் மற்றும் பால சரவணன் நடித்துள்ளனர். இப்படம் ஜூலை மாத இறுதியில் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.