தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ரவி மோகன். ‘ஜெயம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர், தொடக்கத்திலிருந்தே வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கும் ‘கராத்தே பாபு’ என்ற திரைப்படத்தில் அவர் நடித்துக்கொண்டிருக்கிறார்.

அதேபோல் சுதா கொங்கரா இயக்கும் ‘பராசக்தி’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க, ரவி மோகன் அந்தப் படத்தில் வில்லனாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
இதன் தொடர்ச்சியாக, ‘டிக்கிலோனா’, ‘வடக்குப்பட்டி ராமசாமி’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் ரவி மோகன் நடிக்கவுள்ளார். இந்த கூட்டணியில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தை ரவி மோகனின் சொந்த தயாரிப்பு நிறுவனமே தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் ஒரு அதிரடி ஆக்ஷன் கதையம்சத்தில் உருவாகவிருக்கிறது. மேலும், இப்படத்திற்கு “ப்ரோகோட்” (BroCode) என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.