பாலிவுட் சினிமாவின் இளம் நாயகி பூமி பெட்னேகர் தான். இவர் தனக்கு இருக்கும் அரிய தோல் நோய் பற்றி தான் கூறியுள்ளார். எனக்கு எக்ஸிமா என்ற தோல் நோய் இருக்கிறது, சிறுவயதிலிருந்தே இந்தப் பிரச்சினை இருந்திருக்கிறது, ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் கண்டறியப்பட்டது. தான் அடிக்கடி பயணம் செய்யும் போது அல்லது அதிக மன அழுத்தத்தை அனுபவிக்கும்போது தனது தோலில் தடிப்புகள் ஏற்படும். அந்த வலியால் தான் மிகவும் சங்கடப்படுவதாக தெரிவித்துள்ளார். அதேசமயம் இவர் சமூக ஊடகங்கள் மூலம் இந்த நோய் குறித்து விழப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
