தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித். அவர் இயக்கிய ‘அட்டகத்தி, கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை’ போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றன. இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘தங்கலான்’ திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில், இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது ‘வேட்டுவம்’ என்ற புதிய திரைப்படத்தை எழுதியும் இயக்கியும் வருகிறார். இந்த படத்தை, கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ் கதாநாயகனாக நடிக்க உள்ளார். நடிகர் ஆர்யா வில்லனாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, இப்படத்தை பற்றிய புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் இன்று காரைக்குடியில் தொடங்கியுள்ளன. இதற்கிடையே, இப்படத்தில் அசோக் செல்வன் மற்றும் பகத் பாசில் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.