தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக விளங்கும் பா.ரஞ்சித், ‘அட்டகத்தி’, ‘கபாலி’, ‘காலா’, ‘சார்பட்டா பரம்பரை’ போன்ற படங்களை இயக்கி, ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றவர். இவரது இருபதாவது இயக்கமாக சமீபத்தில் வெளிவந்த ‘தங்கலான்’ திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.

இப்போது பா.ரஞ்சித், ‘வேட்டுவம்’ என்ற புதிய திரைப்படத்தை எழுதி இயக்கி வருகிறார். இந்த படத்தை கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது. இந்த படத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ் கதாநாயகனாக நடிக்க, ஆர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதைத் தவிர, அசோக் செல்வன், கலையரசன், லிங்கேஷ் மற்றும் பகத் பாசில் போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் கதாநாயகியாக சோபிதா துலிபாலா நடிக்கின்றார். இந்த திரைப்படம் கேங்ஸ்டர் கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருகிறது.
சமீபத்தில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி, அதிவேகமாக நடைபெற்றது. அந்தப் படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக ஒரு பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டுள்ளதாம். மேலும், இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பில் இப்படத்தில் நடிக்கும் அனைத்து முக்கிய நடிகர்களும் பங்கேற்க இருப்பதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.