‘திருச்சிற்றம்பலம்’, ‘காதலிக்க நேரமில்லை’ ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது ‘இட்லி கடை’, ‘தலைவன் தலைவி’ போன்ற படங்களில் நடித்துவரும் நடிகை நித்யா மேனன், சமீபத்தில் அளித்த பேட்டியில் சில ரசிகர்கள் குறித்து தொடர்பாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் பேசியதாவது, “எந்த ஒரு நிகழ்வுக்கும் நாங்கள் வரும்போது, எங்களை பார்க்க விரும்பும் ரசிகர்கள் கை கொடுப்பது இயல்பானது. ஆனால் அதைக் கடந்துவிட்டு அவர்கள் நெருக்கமாக வந்து, உரசியபடி செல்பி எடுக்கிறார்கள். விலகி நின்றாலும் கூட அவர்கள் நெருங்க முயலுகிறார்கள். ‘நடிகைகள்’ என்ற பெயரில் எதையும் சகிக்கத் தயாராக இருப்போம் என நினைக்கிறார்கள்.
ஆனால் எங்களை இப்படித் தொடுவதற்கு நாங்கள் பொம்மைகளா? என்கிற கேள்வி எனக்குள் எழுகிறது என கூறியதன் மூலம், சில ரசிகர்கள் அளவுக்கு மீறி நடந்துகொள்வது குறித்து தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.