தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் சூர்யா. தற்போது அவர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் தனது 45-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்திற்கு ‘சூர்யா 45’ என்ற தற்காலிக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது, மேலும் சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் சூர்யாவுடன் திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோரும் நடித்துவருகிறார்கள். இதில் சூர்யா ஒரு வக்கீல் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது. நீதிமன்ற வழக்கை மையமாகக் கொண்டு கதை உருவாகியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘சூர்யா 45’ படத்தின் டைட்டில் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.