Wednesday, October 9, 2024

11 வருடங்களுக்கு பிறகு பகத் பாசில் படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் தலைநகரம் பட நாயகி… #Bougainvillea

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2000ஆம் ஆண்டு மிகவும் பிசியான மலையாள நடிகையாக இருந்தவர் ஜோதிர்மயி. தலைநகரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அவர், பின்னர் நான் அவனில்லை, சபரி, பெரியார், வெடிகுண்டு முருகேசன், சிவலிங்கம் ஐபிஎஸ், அறை எண் 305ல் கடவுள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

பின்னர் தயாரிப்பாளர் நிஷாந்த் ஹரிகுமார்-வை திருமணம் செய்து கொண்டு, சினிமாவை விட்டு விலகினார். ஆனால், அவரை விவாகரத்து செய்த பின்னர், ஒளிப்பதிவாளர் அமல்நீரத்-வை திருமணம் செய்துகொண்டார். தற்போது, 11 வருடங்களுக்குப் பிறகு, ‘போகைன் விலியே’ என்ற மலையாள படத்தின் மூலம் மீண்டும் நடிப்புக்கு திரும்பியுள்ளார்.

இந்த படத்தில் ஜோதிர்மயி நடிக்கும் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படத்தில் பஹத் பாசில், குஞ்சாகோ போபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜோதிர்மயியின் இரண்டாவது கணவர் அமல் நீரத் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வருகிற 17ஆம் தேதி திரைக்கு வருகிறது.

- Advertisement -

Read more

Local News