‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படம் பெரும் வெற்றியை பெற்ற பிறகு, நடிகர் அல்லு அர்ஜுன் தமிழ் இயக்குனர் அட்லீயுடன் ஒரு புதிய படத்துக்காக இணையுள்ளார். ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படம் வெற்றி பெற்றதையடுத்து, அதன் இயக்குனரான அட்லீ இந்தப் புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். பீரியட் கதையை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகுந்த பட்ஜெட்டுடன் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது.

இது அல்லு அர்ஜுன் மற்றும் அட்லீ இருவரும் ஒன்றாகக் கூட்டணி அமைக்கும் முதல் படம் என்பதால், இந்த திட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தப் படத்திற்காக ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இணைந்து மிகுந்த முயற்சியுடன் உருவாக்கப்படவுள்ளது. இந்த கதையின் தன்மை, இந்திய சினிமாவில் இதுவரை முன் வராத வகையில் புதிய அனுபவத்தை வழங்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த திரைப்படம் பரலல் யூனிவர்ஸ் என்ற உணர்வுப் புனைகதை அடிப்படையில் உருவாகி வருகிறது. இதில் அல்லு அர்ஜுன் மூன்று விதமான கதாபாத்திரங்களில் நடித்திருப்பார் என கூறப்படுகிறது. இத்திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில், படக்குழுவின் புதிய அறிவிப்பின்படி, இந்தப் படத்தில் கதாநாயகியாக தீபிகா படுகோனே இணைந்துள்ளார். இதுகுறித்து ஒரு சிறிய வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.