நடிகர் சூர்யாவின் சூர்யா 46 புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் நிலையில், இன்று அவர் பழனி வந்துள்ளார். அவருடன் ‘லக்கி பாஸ்கர்’ பட இயக்குனர் வெங்கட் அட்லூரி ஆகியோரும் வந்திருந்தனர்.

பழனி அடிவாரத்தில் இருந்து மலையிலுள்ள கோவிலுக்குச் சென்ற சூர்யாவையும், அவருடன் வந்தவர்களையும் பழனி கோவிலின் அதிகாரிகள் அன்புடன் வரவேற்றனர். இன்று காலை 8 மணிக்கு நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதன் பிறகு கோவில் நிர்வாகத்தின் சார்பில் அவர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
அந்த நேரத்தில் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் நடிகர் சூர்யாவை நேரில் பார்த்து மகிழ்ச்சியடைந்து அவருடன் செல்ஃபி எடுத்தும், புகைப்படம் எடுத்து தங்களின் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.