‘புஷ்பா 2’ படத்திற்கு பிறகு, அட்லி இயக்கும் தனது 22வது திரைப்படத்தில் நடிப்பதற்காக அல்லு அர்ஜுன் தயாராகி வருகிறார். மிகுந்த பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தில் அவர் மூன்று வேடங்களில் நடிக்கவுள்ளாராம். இந்தப் படம் ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பைத் தொடங்கி, 2026ஆம் ஆண்டின் இறுதியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஜூலை மாதத்தில் அல்லு அர்ஜுன் அமெரிக்காவிற்குச் செல்லவிருக்கிறார் எனும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, ‘எட்டாவது தெலுங்கு சம்பரலு’ எனப்படும் நிகழ்ச்சி வட அமெரிக்காவில் ஜூலை மாதத்தில் நடைபெறவுள்ளது.
தெலுங்கு கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் இந்த நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் அல்லு அர்ஜுன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.