ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் சந்திய திரைப்பட விழாவில், அபிஷேக் பச்சன் ‘ஐ வாண்ட் டு டாக்’ திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் விருதை பெற்றுள்ளார்.

இதையடுத்து, அவரது தந்தையும் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் மகனுக்காக ஒரு நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “இந்த பூமியில் மிகவும் மகிழ்ச்சியான தந்தை நான் தான். ஒரு தந்தைக்கு இதை விட பெரிய பரிசு எதுவும் இல்லை. அபிஷேக், நீ எங்கள் குடும்பத்தின் பெருமையும் மரியாதையும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அபிஷேக் பச்சன் கடைசியாக நடித்த படம் ‘காளிதர் லாபட்டா’. மதுமிதா இயக்கிய அந்தப் படம் ஜீ5 தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது. மேலும் அவர் தற்போது “தெய்விக் பகேலா” படத்திலும் நடித்து வருகிறார். மறுபுறம், அமிதாப் பச்சன் தற்போது “கவுன் பனேகா குரோர்பதி” நிகழ்ச்சியின் 17வது சீசனில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். அவர் கடைசியாக ரஜினியின் “வேட்டையன்” திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.