‘மேயாத மான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ரத்னகுமார். அதன் பின்னர் அவரது இயக்கத்தில் வெளிவந்த ‘ஆடை’ மற்றும் ‘குலு குலு’ படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ‘மாஸ்டர்’, ‘லியோ’, ‘விக்ரம்’ உள்ளிட்ட படங்களுக்கு கூடுதல் திரைக்கதை எழுதிய அவர், தற்போது ‘சர்தார் 2’ மற்றும் ‘கராத்தே பாபு’ படங்களுக்கும் திரைக்கதை எழுதியுள்ளார்.

நீண்ட நாட்களாக ரத்னகுமார் இயக்கும் புதிய படம் குறித்து எந்தவொரு அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில், நேற்று அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கையில் மைக் வைத்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து கிடைத்த தகவலின் படி, ரத்னகுமார் அடுத்து கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பென்ச்’ மற்றும் லோகேஷ் கனகராஜின் ‘ஜீ ஸ்குவாட்’ ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இதில் நாயகனாக ‘ரெட்ரோ’ படத்தில் வில்லனாக நடித்த விது நடிக்கிறார் என்றும், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை சிட்டி சென்டரில் நடைபெற்று வருகிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

