சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை கஜோலிடம் தாயின் பொறுப்பு இன்றைய காலகட்டத்தில் மாறிவிட்டது என நினைக்கீற்களா ஒரு கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதில் அளித்த கஜோல், என்னை பொருத்தவரை தாயின் பொறுப்பு என்றும் மாறவில்லை. முன்பு இருந்தது இப்போதும் உள்ளது. இன்னமும் மக்கள், நீங்கள் தவறு செய்தால் உங்கள் தாய் எதுவும் செல்லவில்லையா என்று கூறுவார்கள். மற்றவர்களை மதிக்க வைப்பது ஒரு தாயின் பொறுப்பு. இன்றைய காலத்தில் தாய் மட்டுமல்ல, தந்தையும் சேர்ந்து குழந்தைகளுக்கு சரி மற்றும் தவறை கற்பிக்கிறார்கள் என்றே உணர்கிறேன்
