மம்முட்டி நடித்த ரோர்சார்ச், புழு, பிரம்மயுகம் திரைப்படங்களுக்குப் பிறகு மீண்டும் வில்லனாக அவர் நடிக்கும் புதிய படம் களம்காவல். நடிகர் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தை, குரூப், ஓஷானா படங்களுக்கு கதை எழுதிய ஜிதின் கே. ஜோஷ் இயக்கியுள்ளார். இப்படம் கிரைம் திரில்லர் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

களம்காவல் படத்தை துல்கர் சல்மான் மற்றும் மம்முட்டி இணைந்து தயாரித்துள்ளனர். காவல்துறைக்கு எதிராக சவால்விடும் கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்துள்ளார். களம்காவல் திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு வெளியான டிரெய்லர், ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
களம்காவல் திரைப்படம் வரும் 27ஆம் தேதி வெளியிடப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது, படத்தின் வெளியீடு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகவும், புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் படக்குழு இன்று அறிவித்துள்ளது.

