தமிழ் சினிமாவில் ‘காதல் கொண்டேன்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன். அதன் பின்னர் ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘புதுப்பேட்டை’, ‘மயக்கம் என்ன’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘இரண்டாம் உலகம்’ போன்ற பல சிறப்பான படங்களை இயக்கி பிரபலமானார். குறிப்பாக ‘புதுப்பேட்டை’ மற்றும் ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஆகிய திரைப்படங்களுக்கு தனித்துவமான ரசிகர் வட்டம் உள்ளது

நடிகர் செல்வராகவன் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் விஷ்ணு விஷாலின் ‘ஆர்யன்’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஜவி பிரகாஷ் நடிப்பில் மெண்டல் மனதில் என்ற படத்தையும் இயக்கி வருகிறார் செல்வராகவன்.
சென்னையில் நடைபெற்ற ‘ஆர்யன்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செல்வராகவன், ‘புதுப்பேட்டை 2’ மற்றும் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படங்கள் பற்றிய புதிய தகவலை வெளியிட்டுள்ளார். அதில் புதுப்பேட்டை 2’ படத்திற்கான கதையை 50 சதவீதம் எழுதிவிட்டேன். அதே நேரத்தில் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்தின் கதையும் எழுதிக் கொண்டிருக்கிறேன் விரைவில் பார்க்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த அப்டேட் ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

