மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் டொவினோ தாமஸ் கடைசியாக “நரிவேட்டை” திரைப்படத்தில் நடித்தார். அந்த படத்தின் வெற்றி தொடர்ந்து, தற்போது இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனியின் இயக்கத்தில் நடித்து வருகிறார். இவர் முன்பு “குயின்”, “ஜன கண மன”, “மலையாளி பிரம் இந்தியா” போன்ற படங்களை இயக்கியவர்.

புதிய படத்துக்கு “பள்ளிச்சட்டம்பி” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் “டிராகன்” படத்தின் மூலம் பிரபலமான கயாது லோஹர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், விஜயராகவன், தெலுங்கு நடிகர் சிவகுமார், சுதீர் கரமனா, ஜானி ஆண்டனி, டி.ஜி. ரவி, ஸ்ரீஜித் ரவி, பிரசாந்த் அலெக்சாண்டர், ஜெயகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும், படப்பிடிப்பு நேரத்தில் எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளனர்.