‘வேட்டுவம்’ திரைப்படம் அறிவியல் கற்பனை கதை (Science Fiction) வகையில் உருவாகி வருவதாக இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பா.ரஞ்சித் தற்போது வேட்டுவம் எனும் புதிய திரைப்படத்தை எழுதி இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தை நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனம், கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறது.
ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் தினேஷ், ஆர்யா, சோபிதா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதுகுறித்து சமீபத்தில் வெளியிட்ட அப்டேட்டில், “வேட்டுவம் திரைப்படம் அறிவியல் புனைகதை (Science Fiction) வகையைச் சேர்ந்ததாக இருக்கும்,” என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.