தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் பிரசாந்த் கடந்த ஆண்டு அவர் நடித்து வெளியான ‘அந்தகன்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, அவர் கவனமாக கதைகளை தேர்ந்தெடுத்து படங்களில் நடிக்கவுள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பின் ஹரி இயக்கத்தில் பிரசாந்த் ஒரு படத்தில் நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடக்கின்றன. மற்றொருபுறம், தெலுங்கில் வெளியாகி வரவேற்பு பெற்ற ‘கோர்ட் vs ஸ்டேட்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் இவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில், பான் இந்தியா படம் ஒன்றில் நடிக்க பிரசாந்த் ஆர்வமாக உள்ளார் என்றும் இதற்காக அவர் மற்ற மொழி நடிகர்கள் சிலரிடம் பேசி வருகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த படம் தொடர்பான இயக்குனர், கதை உள்ளிட்ட விபரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.