நந்தமுரி பாலகிருஷ்ணா (பாலையா) தற்போது ‘அகண்டா 2’ படத்தில் நடித்து வருகிறார். இது ‘அகண்டா’ படத்தின் தொடர்ச்சியாகவும், மாஸ் இயக்குநர் போயபதி ஸ்ரீனு இயக்கியிருப்பதாலும், இப்படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. டிசம்பர் 5 அன்று இப்படம் வெளியாகிறது.

இதையடுத்து, இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் பாலையா தனது அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படம் அவரது கெரியரில் 111வது படம் (என்.பி.கே111) ஆகும்.
இப்படம், கோபிசந்தின் முந்தைய படங்களிலிருந்து வித்தியாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், பாலையா இதில் மீண்டும் இரட்டை வேடத்தில் நடிப்பார் என்றும், ஸ்பார்டகஸ் மற்றும் அலெக்சாண்டர் கதாபாத்திரங்களால் ஈர்க்கப்பட்டு அந்தக் கதாபாத்திரங்களை வடிவமைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.