சுஜித் இயக்கத்தில் பவன் கல்யாண், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடித்த ஓஜி தெலுங்கு திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இதுவரை இந்த படம் ரூ.250 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வெற்றி பெற்றுள்ளது.

நேற்று ஹைதராபாத்தில் உள்ள பிரிவியூ தியேட்டரில் சிரஞ்சீவி குடும்பத்தினருக்காக மட்டும் பிரத்யேகக் காட்சி நடைபெற்றது. இதில் சிரஞ்சீவி, அவரது மகன் ராம் சரண், படத்தின் நாயகன் பவன் கல்யாண், அவரது மகன் அகிரா நந்தன், நடிகர்கள் சாய் துர்கா தேஜ், வருண் தேஜ், வைஷ்ணவ் தேஜ் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் கலந்துகொண்டனர்.
சமீபத்தில் கடுமையான காய்ச்சலால் ஓய்வில் இருந்த பவன் கல்யாண், உடல் நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து தனது குடும்பத்தினருடன் நேற்றைய பிரத்யேகக் காட்சியில் கலந்து கொண்டார். இப்படம் குறித்து சிரஞ்சீவி, “சொல்ல வார்த்தையே இல்லை, சூப்பர், சூப்பர்” என்று பாராட்டினார்.

